
ஐபிஎல் 2025 சீசனில், ரசிகர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய கிரிக்கெட் லீக் புதிய முயற்சியாக ரோபோட் நாயை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நான்கு கால்கள் கொண்ட இயந்திர நாயின் வீடியோ, ஐபிஎல் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, வீரர்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் அக்சர் பட்டேல், “க்யா ஹை யே?” என ஹிந்தியில் ஆச்சரியத்துடன் கேட்க, மும்பை இந்தியன்ஸ் வீரர் ரீஸ் டொப்லி சிரித்தபடி, “இது என்ன டாக் வகை?” என வினவினார். ஹார்திக் பாண்ட்யாவும் அந்த ரோபோட்டுடன் உரையாடி, “குட் பாய்” என அழைத்துப் பாராட்டினார்.
𝗛𝗼𝗹𝗱 𝗼𝗻! 𝗪𝗲’𝘃𝗲 𝗮 𝗻𝗲𝘄 𝗜𝗣𝗟 𝗳𝗮𝗺𝗶𝗹𝘆 𝗺𝗲𝗺𝗯𝗲𝗿 𝗶𝗻 𝘁𝗼𝘄𝗻 👀
It can walk, run, jump, and bring you a ‘heart(y)’ smile 🐩❤️
And…A whole new vision 🎥
Meet the newest member of the #TATAIPL Broadcast family 👏 – By @jigsactin
P.S: Can you help us in… pic.twitter.com/jlPS928MwV
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
இந்த ரோபோட் நாய் வெறும் காட்சி உண்டாக்கும் பொருட்டு மட்டுமல்ல; இதில் உயர் தெளிவுத்தன்மை கொண்ட கேமராக்கள், நுண்ணறிவு இயக்க திறன்கள் உள்ளன. இதன் மூலம் எதிர்கால விளையாட்டு ஒளிபரப்பில் புதிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, பிரபல கமெண்டேட்டர் டேனீ மோரிசன் ரோபோடின் திறன்களை விளக்கிக் கூறி, அதன் “லவ் போஸ்” எனப்படும் செயலை ரசிகர்களுக்கு காண்பித்து மகிழ்ச்சியடைந்தார். இந்த ரோபோட் டுக்கு பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்க, ரசிகர்களிடம் சிறந்த பெயர் பரிந்துரைகளை பகிருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சி, கிரிக்கெட் தளத்தில் நவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முன்னோடியான படியாகும்.