தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்கபட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சட்டசபையில் மரபுகளை தகர்க்கும் முயற்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஈடுபட்டுள்ளார். மரபுகளை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் உரசி இருக்கிறார். தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக நிழல் யுத்தத்தை நடத்துவது ஜனநாயக விரோதமானது. அவர் அரசமைப்பின் காவலராக இருக்க வேண்டும். நாடக கம்பெனியின் இயக்குனர் போல செயல்படக்கூடாது என கூறியுள்ளார்.