தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஏன் வெளியேறினார் என்பது குறித்து பேரவை தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் நீதி கேட்டு சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வந்தனர். அவர்கள் கையில் பதாகைகளுடன் வந்தனர். ஆளுநர் எழும்பும்போது மற்ற கட்சியினர் பதாகைகளை காட்டினர்.

பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் அவருக்கு எதிராக காட்டினார்களா என்பது தெரியாது. அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவர்கள் யாருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் பொருட்டு ஒரு கலவர நோக்கத்துடன் செயல்பட்டதால் அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்களை வெளியேற்றினோம். ஆளுநருக்கு மதிப்பளித்து தான் அவர்களை வெளியேற்றினோம் எனக் கூறியுள்ளார்.