மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தில் குண்ட்லிக் உத்தவ் காலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 26-ஆம் தேதி மைனாவுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று வாக்குவாதம் முற்றி கோபமடைந்த உத்தவ் காலே தனது மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

இதனால் மைனா அலறியடித்து கொண்டு வீட்டை சுற்றி ஓடி வந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மைனாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மைனா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.