
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதனால் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில் அஞ்சாவ் என்ற மாவட்டத்தில் ஆற்றுக்கு இடையில் ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்த கனமழையால் அதிகமாக நீர் வரத்தின் காரணமாக அந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த தொங்கு பாலத்தின் வழியாக ஒரு நபர் ஆற்றை கடக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் காட்டாற்று வெள்ளத்தின் குறுக்கே அமைக்கப்பட்ட தொங்கு பாலத்தில் ஒருவர் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கின்றார். இந்த வீடியோ குறித்து மத்திய அமைச்சர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது, பருவ மழை காலத்திலேயே உலகிலேயே அதிக மழை பெய்யும் மாநிலமாக அருணாச்சல பிரதேசம் உள்ளது. இந்தியா, சீனா மற்றும் மியான்மர் எல்லையின் முக்கோண சந்திப்புக்கு அருகில் அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டம் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள தொங்கு பாலத்தில் காட்டாற்று வெள்ளத்திற்கு நடுவே ஒரு நபர் ஆற்றை கடப்பது உயிருக்கு ஆபத்தானது. எனவே தயவு செய்து அனைவரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்யும் என பதிவிட்டுள்ளார்.