
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அந்த இளம்பெண் மேற்கு தாம்பரத்தில் தங்கி உள்ளார். இந்த இளம்பெண் ஒரு நட்சத்திர ஹோட்டலின் மதுபான விடுதிக்கு செல்லும் போது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாகின்(23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவான்மியூர் சிக்னலில் இருக்கும் தனியார் விடுதியில் மூன்று நாட்கள் அறை எடுத்து இருவரும் தங்கி மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் ஷாகின் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ கால் மூலம் பெண்ணை நண்பர்களிடம் காட்ட முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் கழிப்பறைக்கு ஓடி சென்று ஒளிந்து கொண்டார். மேலும் தான் விடுதி அறையில் சிக்கியிருப்பதாக போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி சமூக இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை உள்ள பிரிவுகளின் கீழ் ஷாகின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.