
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ராஜ்கிர் மிஸ்திரி (46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் கடந்த ஒரு வாரமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. இப்போது அடிவயிற்றில் சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அப்போது அவருக்கு பெண்களுக்கு இருக்கும் கர்ப்பப்பை இருப்பது தெரியவந்தது. அதில் முழுமையாக வளர்ச்சி பெறாத கர்ப்பப்பையுடன் கருமுட்டையை உருவாக்கும் ovary இருந்தது. ஆனால் அவரிடம் பெண் தன்மைக்கான எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை. இதனால் இந்த அரிதான வியாதியை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவருடைய வயிற்றில் இருந்த கருப்பை மற்றும் ஓவரியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். இதனால் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.