
திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்ச மு.க ஸ்டாலின் கூறியதாவது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் பேசுகிறவன் நான் இல்லை. எத்தனை படைகள் வந்தாலும் அவர்களின் வியூகங்களை முறியடிக்கும் படை என்னிடம் இருக்கிறது. நெருக்கடியில் ஆட்சிக்கு வந்தோம்.
10 ஆண்டு அதிமுக ஆட்சியின் இருட்டில் இருந்து மீட்டெடுப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளும் பாஜகவின் நெருக்கடியில் சமாளிக்கிறோம் என கூறியுள்ளார்.