
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிப்பிட் பகுதியில் 28 வயதுடைய நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி 5 மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கணவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்ததும் இளம்பெண் அவர்களை தடுக்க முயன்றார்.
அப்போது மர்ம நபர்கள் இளம்பெண்ணின் ஆடைகளை கழற்றி சித்திரவதை செய்துள்ளனர். ஐந்து பேரும் இணைந்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.