
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் பஜனைமடம் பகுதியைச் சேர்ந்தவர் முபீனா(26). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர். கடந்த செப்டம்பர் மாதம் முபீனா தனது மைத்துனி முனீராவின் வீட்டிற்கு சென்றார். அங்கு 17 பவுன் தங்க நகைகளை திருடியுள்ளார். கடந்த பத்தாம் தேதி நகை திருடுபோனதை அறிந்த முனீரா சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது முபீனா நகைகளை திருடியது தெரியவந்தது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முபீனாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது ஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு நகைகளை திருடியதாக முபீனா ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர்.