தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியில் முத்து என்பவர் வசித்து வரும் நிலையில் அவருக்கு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரமணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில் இன்று அவரை ஒருதலையாக காதலித்து வந்த மதன் என்பவர் பள்ளி வகுப்பறையில் புகுந்து ரமணியை குத்தி கொலை செய்தார். அதாவது மதன் ரமணியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில் பெற்றோரிடம் சென்று கேட்டபோது அவர்கள் விருப்பமில்லை என்று கூறிவிட்டனர்.

ரமணியின் பெற்றோர் விருப்பமில்லை என்று கூறியதை கேள்விப்பட்ட மதன் ஆத்திரத்தில் பள்ளிக்கு சென்று ‌ ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் தற்போது ரமணியின் உடலுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் ஆசிரியை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இது போன்ற காட்டுமிராண்டித்தனமானவர்களுக்காக யாரும் ஆதரவு கொடுத்து வராதீர்கள். அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்ட பிறகு தான் பள்ளி திறக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அதன்படி நவம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.