
திருப்பதி திருமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மாங்கல்ய மாடவம் (Madhavam Guest House) எதிரே, ஆந்திர மாநில பேருந்து கழகம் (RTC) சார்பில் நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஏசி பஸ்ஸின் டிரைவர் அன்வேஷ் ரெட்டியை, பாம் ஸ்குவாட் (Bomb Squad) போலீஸ் ஒருவர் தாக்கிய சம்பவம் தற்போது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த பஸ், அலிபிரி டிப்போவைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. டிரைவர் தனது கடமையில் இருந்தபோதே இந்த தாக்குதல் நிகழ்ந்தது. சம்பவம் நடந்தபின், இது தொடர்பான புகாரை ஆர்.டி.சி. டிரைவர்கள் மற்றும் யூனியன் தலைவர்கள் இணைந்து திருமலை டூ டவுன் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.
తిరుమలలో ఆర్టీసీ డ్రైవర్ పై కానిస్టేబుల్ దాడి
మంగళవారం రాత్రి తిరుమల మాధవం గెస్ట్ హౌస్ ఎదురుగా బస్సునిలిపి ఉండగా జరిగిన ఘటన
అలిపిరి డిపోకు చెందిన ఎలక్ట్రికల్ ఏసీ బస్సు డ్రైవర్ అన్వేష్ రెడ్డిపై బాంబు స్క్వాడ్ కానిస్టేబుల్ దాడి
ఎలక్ట్రికల్ ఏసీ బస్సు సీసీటీవీ కెమెరాల్లో… pic.twitter.com/WevAB2sj3h
— Telugu Scribe (@TeluguScribe) June 5, 2025
இச்சம்பவம் குறித்து ஆர்.டி.சி. உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலும் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் காரணமே இல்லாமல் அரசு பேருந்து ஓட்டுநரை சரமாரியாக அடித்த நிலையில் அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் விரைவில் அதிகாரிகள் விசாரணையை தொடங்குவார்கள் என்று கூறப்படும் நிலையில் தற்போது வீடியோ வெளியானதால் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.