உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடம்பூரில் அமைந்துள்ள குஷ்மந்தா தேவி கோயில் அருகே பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சாட் விற்பனையாளர்களுக்கிடையே வாடிக்கையாளரை தங்களது கடைக்கு அழைத்துச் செல்லும் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு, வன்முறையாக மாறியது.
சாட்-டிக்கி மற்றும் பானி பட்டாஷா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு கடைக்காரர்களுக்கு இடையே வாடிக்கையாளர்களை தங்கள் கடையில் வர வைக்க போட்டி ஏற்பட்டது. இது வாக்குவாதமாக துவங்கி, சில நிமிடங்களில் கைகலப்பாக மாறியது.

பெண்கள் மற்றும் ஆண்கள்கலந்து ஒருவரையொருவர் கட்டையால் தாக்கியும், தலைமுடியை இழுத்தும், கற்களை வீசியும் அப்பகுதியையே பரபரப்பாக மாற்றினர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் திணறினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தாக்குதலுக்குள்ளானவர்களின் புகாரின் அடிப்படையில் நான்ஹே சாஹு மற்றும் ராஜா சாஹு ஆகியோரிடம் விசாரணை நடத்தி, அவர்கள்  மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.