
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டிற்கு நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 26 ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நவம்பர் 27 ஆம் தேதி திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.மேலும் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.