
கரூர் மாவட்டத்திலுள்ள சின்னாண்டாங்கோவில் பகுதியில் பென்சில் தமிழழகன் என்பவர் வசித்து வருகிறார். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. இவரும் அவரது கூட்டாளிகளான பிரகாஷ், ஹரிகரன், மனோஜ் உட்பட நான்கு பேர் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்துக்காக காத்திருந்த ஒரு பயணியிடம் அவர்கள் சம்பந்தமே இல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதோடு அந்த பயணியை அவர்கள் சரமாரியாக அடித்த நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மனோஜ், ஹரிகரன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்த நிலையில் தமிழழகன் மட்டும் தலைமறைவாகிவிட்டார்.
இவரை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் நேற்று இரவு கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவரை பிடித்தனர். அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்ற நிலையில் அவரை சுட்டு பிடித்தனர். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.