கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் பிரபல நடிகரான சிவகுமார் தனது மகன் கார்த்தியுடன் விழாவில் பங்கேற்றார். மேடையில் பேசிய கார்த்தி கல்வி என்றாலே அரசு பள்ளியில் தான். அகரம் அறக்கட்டளையில் இருக்கும் மாணவர்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள்.

அவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களை அரசு நன்றாக பார்த்துக் கொள்கிறது. தமிழக அரசு பள்ளிகளின் கல்வித் தரம் வெளிநாட்டு பள்ளிகளுக்கு இணையாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் கல்வி உயர்தரமாக வழங்கப்படுவது பெருமையாக உள்ளது. என் அத்தை படிக்கும்போது கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பள்ளிக்கு செல்வதற்கு சிரமப்பட்டார் என கூறிக் கொண்டிருந்த போதே கார்த்தி கண் கலங்கினார்.

அவரை சிவகுமார் சமாதானப்படுத்தி அமர வைத்தார். மேலும் கார்த்தி சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.