
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே ஆதனூர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்க செந்தில்குமார் கலையரசி தம்பதி வசித்து வந்துள்ளனர். இதில் கலையரசி ஒரு அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென செந்தில்குமார் மற்றும் கலையரசி தூங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை பார்த்து மகன்கள் இருவரும் அலறிய நிலையில் உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி தீயணைப்புத் துறையினர் வந்து இருவரையும் மீட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் செந்தில்குமார் மருத்துவமனையில் இருந்த போது அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன்னுடைய மனைவி அரசியல் பிரமுகர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறினார். இதனால் அதிகாலை நேரத்தில் தன் மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு பின்னர் போலீசுக்கு பயந்து தானும் தீ வைத்து எரித்துக் கொண்டதாக கூறினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.