அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் வந்துவிட்டது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் என்பவர் அது போன்ற ஒரு நறுமணத்தை நடத்தி வருகிறார். பல்வேறு மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக வேலை பார்த்துள்ளார். அந்த கட்சிகளை வெற்றி பெறவும் வைத்துள்ளார்.

இந்த நிலையில் தனது கட்டணம் குறித்து பிரசாந்த் கூறியதாவது, நான் தேர்தல் வியூக வகுப்பாளர். அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வகுத்துக் கொடுத்தால் அந்த கட்சியிடம் இருந்து 100 கோடிக்கும் அதிகமாக கட்டணமாக பெற்றுள்ளேன். இந்தியாவில் 10 மாநிலங்களில் எனது ஆலோசனைகளை கேட்ட கட்சிகள் ஆட்சியில் உள்ளது. எனக்கு நிதி என்பது ஒரு பிரச்சனை இல்லை தனது கட்டணத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.