
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோதியில் பிரசித்தி பெற்ற ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பாஜக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் கோவிலுக்கு செல்லும் வகையில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 6,400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் உள்ளது.
இவற்றை ஒரு தனியார் நிறுவனம் பராமரித்தவர் நிலையில் அதன் மதிப்பு மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் தற்போது 3,800 வண்ண விளக்குகள் மற்றும் 36 லேசர் விளக்குகள் திருடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கணக்கெடுத்த போது அனைத்து விளக்குகளும் இருந்த நிலையில் தற்போது ஏராளமான விளக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு மட்டும் சுமார் 50 லட்சம் ரூபாய் ஆகும். இந்த திருட்டு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.