
இன்றைய கால கட்டத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. மனிதர்கள் செய்யும் வேலைகளை ரோபோக்கள் செய்கின்றன. அந்த வகையில் சீனாவில் ஷாங்காயில் உள்ள ஆய்வு கூடத்தில் 100 மனித வடிவ ரோபோக்களுக்கு சீன ரோபாட்டிக்ஸ் நிறுவனம் விதவிதமான பயிற்சி கொடுத்து வருகிறது.
துணிகளை அயர்ன் செய்தல், Sandwich தயாரித்தல், பொருட்களை பையில் வைத்தல், பொம்மைகளுடன் விளையாடுவது, அடுப்பை சுத்தம் செய்தல் என விதவிதமான பயிற்சி கொடுத்து வருகிறது. இப்படி அந்த ரோபோக்களுக்கு ஒரு நாளைக்கு 17 மணி நேரம் பயிற்சி தரப்படுகிறது.