
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் இருந்து தனியார் பேருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு நேரம் கலக்கடா என்ற பகுதியில் சென்ற போது தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விபத்தில் தனது தாய் இறந்தது அறியாமல் ஒரு குழந்தை அவர் பக்கத்தில் நின்று கதறி அழுதது. இந்த சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்தது.