
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை பகுதியினை சேர்ந்தவர் அரவிந்த்(26). இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அரவிந்தை தேடி வந்தனர்.
அவர் மைசூரில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அரவிந்தை கைது செய்தனர். பின்னர் அவர் கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.