“நீயா நானா” நிகழ்ச்சி வழக்கம்போல் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விவாதத்துடன் வந்தது. இந்த முறை, “வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையை பராமரிப்பதில் சிக்கல் உள்ளவர்களும், அவர்களுக்கு எதிராகக் கருத்து கூறுவோரும்” என்ற தலைப்பில் நடந்த விவாதம், பார்வையாளர்களின் மனதில் மிகுந்த கோபத்தையும், வலியையும் உருவாக்கியது.

சிலர் தங்கள் பெற்றோரை சுமையாக பார்க்க, “அவர்கள் உட்கார்ந்து சாப்பிட மட்டுமே செய்கிறார்கள், எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என நாணமின்றி பேசுவது, மனிதத்தன்மைக்கு எதிராக இருந்தது. குழந்தையாக இருந்தபோது தந்தையும் தாயும் அவரை இவ்வாறு நினைத்திருந்தால், அவர் இவ்வாறு பேச முடியாது.

 

ஒரு புறம், பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது தான் சிறந்த தீர்வு என திமிராகக் கூறும் பெண்மணி, தன்னுடைய தனிப்பட்ட வசதிகளுக்காக உறவுகளை துறப்பது சமூகத்திற்கு எத்தனை கடுமையான எண்ணங்களை விதைக்கிறதென தெரியவில்லை.

இக்கருத்துகளுக்கு எதிராக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்கள், “இந்த எபிசோடு வெளியானதும் மக்கள் உங்களை கேள்வி கேட்பார்கள்” என எச்சரித்த போது, “எனக்கு பதில் சொல்லத் தெரியும்” என சுயநலவாதமாக பதிலளித்ததற்கு, தொகுப்பாளர் கோபிநாத் உணர்வுப்பூர்வமாக பதிலடி கொடுத்தார். “மனிதன் உணவுக்காக மட்டும் வாழ்வதில்லை; உறவுக்கும், உணர்வுக்கும் வாழ்கிறான்” என கூறிய அவருடைய வார்த்தைகள், சமூகத்தின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

 

View this post on Instagram

 

A post shared by AGNEL JIJOE 🌟 (@useful_editz2.0)

“>

“வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்” என அடுத்ததாக பதிலளித்த அந்த பெண்மணிக்கு, “நாங்கள் என்ன மாடா மேய்த்துக் கொண்டிருக்கிறோம்?” எனக் கூறி கோபமாக பதிலளித்த கோபிநாத், அக்கரையை இழந்த சமூக சிந்தனைகளை நேரடியாக சுட்டிக்காட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பலரும் கோபிநாதுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.