சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பரவி வரும் ஒரு வீடியோ,  அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு சிறு குழந்தை, தனது வீட்டின் முற்றத்தில் ஒரு பெரிய மலைப்பாம்பின் அருகில் பயமின்றி நிற்பதும், அதை ஒரு பொம்மையைப் போல் தூக்க முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது.

இந்தக் காணொளி, @phriie_putranaja28 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது. வீடியோ சில விநாடிகளே ஆனாலும், குழந்தையின் உயிருக்கு ஏற்பட்ட அபாயம் பார்வையாளர்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

அந்தக் குழந்தை பாம்பை நோக்கிச் சென்று தனது வீட்டிற்குள் வரச் சொல்வது போன்று காணப்படுகிறது. அதிர்ச்சிக்குரிய விஷயமெனில், அந்த மலைப்பாம்பு, அமைதியாக இருக்கிறது. இதன் அடிப்படையில், பலர் அந்த பாம்பு ஒரு செல்லப் பிராணியாக வீட்டில் வளர்க்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கின்றனர்.

எனினும், ஒரு விஷப் பாம்புடன் ஒரு குழந்தையை இவ்வாறு விட்டு வைப்பது என்பது மிகவும் பொறுப்பற்ற செயல் என பெரும்பாலான சமூக வலைதள பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களில் சிலர், “ஒரு ரீலுக்காக குழந்தையை மரண அபாயத்தில் தள்ள வேண்டாமே” எனக் கண்டித்துள்ளனர். மற்றொருவர், “இந்த வீடியோவை எடுத்த நபரை கைது செய்ய வேண்டும்” என கோரியுள்ளார். குழந்தையின் பெற்றோர் மற்றும் வீடியோ பதிவிட்ட நபர் மீது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன.