
மத்திய அரசு அலுவலகங்களில் தேவையில்லாத பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் குறிப்பில், மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பிறகு பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் கழிவுகளாக மாறியது. இந்த பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் சுமார் 2364 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
அதாவது ஸ்கிராப் விற்பனையின் மூலம் கடந்த 3 வருடங்களில் மட்டும் தேவையில்லாத பொருட்களை விற்பனை செய்ததில் 2364 கோடி கிடைத்துள்ளது. மேலும் தேவையில்லாத பொருட்களை விற்பனை செய்து பல கோடி ரூபாய் லாபம் ஈட்டியதால் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் செயல்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
Business Today: Government earns Rs 2,364 crore by selling scrap from offices in just 3 years, PM Sh @NarendraModi hails feat#DARPG
Read:https://t.co/1A632h9ivU pic.twitter.com/ZkjXWJEOGZ
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) November 11, 2024