
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்தில் எட்டுமைலாபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பாலத்திலிருந்து மர்ம நபர்கள் சிலர் 31 நாய்களை தூக்கி கீழே வீசியுள்ளனர். இதில் 20 நாய்கள் இறந்த நிலையில் 11 நாய்கள் பலத்த காயம் அடைந்துள்ளது.
இறந்த நாய்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஏதேனும் விஷம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்ள சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்த நாய்கள் விலங்குகள் நல காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளி யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.