
பீகார் மாநிலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மங்கள் பாண்டே. இவர் பெகுசராய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மருத்துவமனை அதிகாரிகள் அமைச்சருக்கு சர்ஜிக்கல் தொப்பிக்கு பதிலாக ஷூ கவரை கொடுத்து விட்டனர். இதனை அமைச்சர் சரிவர கவனிக்காமல் தன் தலையில் அணிந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.
இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த புகைப்படத்தில் இருப்பவர் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே. இவருக்கு அங்கிருந்த ஊழியர்கள் சர்ஜிகல் தொப்பிக்கு பதிலாக ஷூ கவரை கொடுத்துள்ளனர். அதனை அமைச்சரும் அணிந்துள்ளார். இப்போது பீகாரின் சுகாதாரத்துறை எப்படி இருக்கிறது என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
तस्वीर में दिख रहे शख़्स बिहार के मा॰ स्वास्थ्य मंत्री श्री मंगल पांडे जी है।
स्वास्थ्य विभाग के कर्मियों ने अस्पताल में इन्हें सर्जिकल हेड कवर की बजाय सिर पर शू-कवर पहना दिया। मंत्री जी को भी अंतर मालूम नहीं।
अब आप बिहार की स्वास्थ्य व्यवस्था की बस कल्पना करिए। ये बिहार के अब… pic.twitter.com/kFq2t5lIiY
— Tejashwi Yadav (@yadavtejashwi) October 21, 2024