
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் தற்போதிலிருந்தே அதற்காக களமிறங்கும் வேட்பாளர்களுக்கான களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக குடியரசு கட்சியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் ஏற்கனவே கரோலினாவின் ஆளுநராக இரண்டு முறை பதவி வகித்தவர் ஆவார். இந்த நிலையில் இவர் நியூயார்க் போஸ்ட் இதழில் வெளிவந்த அரசியல் கட்டுரை என்ற தலைப்பில் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “அமெரிக்க நாட்டின் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும் நாடுகளுக்கே நிதி உதவி வழங்கப்படும். அமெரிக்காவை வெறுக்கும் சீனா, பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவி அடியோடு நிறுத்தப்பட வேண்டும். மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த ஆண்டு மட்டும் 38,150 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரி செலுத்துபவர்களுக்கு தங்களுடைய பணம் எப்படி, எங்கு செலவிடப்படுகிறது என்பது குறித்து தெரிய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.