
அமெரிக்க நாட்டில் சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்ற நிலையில் சட்டவிரோதமாககுடியேறியவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். அந்த வகையில் சட்டவிரோத குடியிருப்பு வாசிகளை நாடுகடத்தும் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க ராணுவ விமானத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த இந்தியர்களை நாடு கடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி 205 இந்தியர்களை விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த விமானம் இன்று டெல்லியை வந்தடையும் என்று கூறப்படுகிறது. மேலும் வரலாற்றில் முதல் முறையாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து அவர்களை ராணுவ விமான மூலம் திருப்பி அனுப்புவோம் என்று ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.