
அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதற்கு அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் இல்லை. சசிகலா, தினகரன் ஆகியோரிடமும் பேசியுள்ளேன். அமித்ஷா ஒன்றாக இருக்குமாறு எவ்வளவோ சொன்னார். எடப்பாடி பழனிச்சாமி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் விளைவுதான் இதெல்லாம். 2026 தேர்தலில் ஒன்றிணைந்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு. இல்லை என்றால் அனைவருக்கும் தாழ்வு தான் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.