உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் நடந்த ஒரு கொடூர சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான ஒரு நபர், தனது 7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு, குற்றத்தை மறைக்க நாடகமாடியுள்ளார். சம்பவம் நடந்த நாளில், பக்கத்து வீட்டுக்காரரான சாந்தி தேவி கொடுத்த உணவினால் சிறுமி பாதிக்கப்பட்டதாகக் கூறி, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும், அந்த நபர் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த உணவை சாப்பிட்டு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாகக் கூறினார்.

ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்தது உறுதியானது. மருத்துவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்க, போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது குடிபோதையில் அந்த நபர் தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு குற்றத்தை மறைப்பதற்காக பக்கத்து வீட்டு சாந்தி தேவி கொடுத்த உணவை சாப்பிட்டு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக கூறி குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று நாடகமாடியுள்ளார். இதனால் போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.