இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பேட்டி அளித்தனர். அதில் ஒரு பெண் கூறியதாவது, தூங்கி எழுந்ததும் அப்பா எங்கனு புள்ளைங்க கேட்டா நாங்க எங்க போவோம்?”

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவங்க வீட்டுக்கு வந்துருவாங்களான்னு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வேற தொழில் தெரியாது. ஒவ்வொரு நாளும் போராடுற சூழ்நிலை தான் இருக்குது. இந்த நிலைமை என்னைக்கு மாறப்போகுதுன்னு தெரியல என கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.