
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவடிகாரஹட்டி பகுதியில் நக்மா என்பவர் வசித்து வருகிறார். நக்மா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்தார். இந்த தம்பதியினருக்கு எட்டு வயதில் மகன் உள்ளார். விவாகரத்து பெற்ற பிறகு இருவரும் மறுமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் 8 வயது சிறுவன் அடிக்கடி தனது தந்தையை பார்த்து வந்தார்.
இது நக்மாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் கோபமடைந்த நக்மா தனது மகனின் கை கால்களில் சூடு வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் சித்திரவதை தாங்க முடியாமல் சிறுவன் பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். இதுகுறித்து சிறுவனின் பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.