ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரான பாப்பையா என்பவர் பார்வதிபுரம் ஆர்டிசி சர்க்கிள் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் உமா என்கிற மின் ஊழியர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் பாப்பையா அவருக்கு அபராதம் விதித்துள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த உமா அபராதம் விதித்த காரணத்தினால் காவல் உதவி மையத்தின் அருகே இருந்த மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை சரி செய்ததோடு மின் ஊழியர் உமாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அபராதம் விதித்ததால் ஆத்திரம்….. மின் ஊழியர் செய்த செயல்….. அதிகாரிகள் விசாரணை…..!!
Related Posts
தாயின் கள்ளக்காதல்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற இளைஞர்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!
கள்ள காதலியின் ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவில் எட்வர்ட் முர்ரே (23) என்ற இளைஞருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அமினாதா கெய்ட்டா என்ற பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே…
Read moreபூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு…. அட இதில் எல்லாமே வித்தியாசம் தான்…!!
விண்வெளியில் பல்வேறு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த நிலையில், பூமியில் இருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எக்ஸோப்ளானெட் SPECULOOS-3 b என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் பூமியை போன்று காணப்படும் இந்த கிரகம் அல்ட்ராகூல் நட்சத்திரத்தைச்…
Read more