ஒடிசாவின் புதிய முதல்வர் மோகன் சரண் மாஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.  இவர் கியோஞ்சர் சதார் பகுதியில் உள்ளரெய்காலா என்ற பகுதியில் தான் பிறந்து வளர்ந்து வந்துள்ளார். 1997 ஆம் வருட முதல் 2000 வருடம் வரை கிராம தலைவராக இருந்த இவர் அதே வருடம் பாஜக சார்பாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றிருந்தார்.

2019 ஆம் வருடம் எம்எல்ஏவாக அவர் வெற்றி பெற்ற பிறகும் சட்டசபையில் அவர் பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இவர் இந்த தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று கடைசியாக 2024 ஆம் வருடம் முதல்வர் பதவியை அடைந்து நினைத்து கூட பார்க்காத உயரத்தை எட்டியுள்ளார்.