பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸ், தனது கட்சியில் வேட்பாளர் தேர்வைத் தொடர்பாக முக்கியமான மற்றும் உறுதியான அறிக்கையை வெளியிட்டுள்ளார். கட்சியின் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்கள் உட்பட தன்னுடன் செயல்படும் அனைவரும் தான் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடியவர்கள் என்றும், வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் முன்னிலையில் உரையாற்றிய ராமதாஸ், “இங்கு வந்திருக்கும் மாவட்ட செயலர்கள், மாநில தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் எதிர்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள். ஏனெனில் பாமாகாவில் அனைத்து அதிகாரமும் என்னிடம் தான் உள்ளது. இதனால்தான் நல்லவர்களையும், திறமையான தலைவர்களையும் சட்டமன்றத்திற்கு கொண்டு வர முடியும். இந்த அறிவிப்பை உங்கள்  மூலமாக மக்கள் வரையில் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட வேண்டியவர்கள் குறித்து ராமதாஸ் வெளியிட்ட இந்தக் கூற்று, கட்சிக்குள் புதிய குழப்பங்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனெனில் பல முக்கிய முன்னணி தலைவர்கள் போட்டியிட விரும்பும் நிலையில், அனைத்து சீட்டுகளும் ஏற்கனவே ராமதாஸ் தேர்வு செய்தவர்களுக்கே வழங்கப்படும் என அறிவித்திருப்பது, பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்த உரையின் வழியாக, பாமாக்காவின் அடிப்படைத் தளத்தலைவர்களுக்கு ஒரு நேரடி அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க முடியும் அதிகாரம் தனக்கே உள்ளதாக கூறி, தன்னுடன் செயல்படும் நபர்களுக்கே எதிர்காலம் உள்ளது என வலியுறுத்தியுள்ளார். இது பாமா=கா கட்சியின் உள்ளமைப்பிலும், எதிர்வரும் தேர்தல் திட்டத்திலும் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மேலும் அன்புமணி நான்தான் கட்சியின் தலைவர் என்று கூறுநிலையில் ராமதாஸ் தனக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும் இனி சட்டமன்றத் தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்பதையும் நாம் தான் முடிவு செய்வேன் எனவும் கூறியுள்ளது தற்போது அன்புமணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.