நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டாடா பிரிவு எம்ஜிஆர் நகரில் மணிகண்டன் கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகன் ஜெஸ்வின் பிறகு பத்து மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் கலைச்செல்வி குடுமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது மகனுக்கு தடுப்பூசி போட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் குழந்தையை கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு குழந்தை மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து கலை செல்வி கூறும் போது, குழந்தைக்கு எந்தவித உடல் பாதிப்பும் இல்லை. தடுப்பூசி செலுத்திய பிறகு தான் குழந்தை இறந்தது. எங்களுக்கு தகுந்த தீர்வு கிடைக்க வேண்டும்.

தடுப்பூசியில் செலுத்திய மருந்து காரணம் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் முதன்மை அதிகாரி ரவிசங்கர் கூறியதாவது, கோத்தகிரி மருத்துவமனையில் இருந்து குழந்தையை உதகைக்கு அழைத்து வரும்போது அதிக அளவு மூச்சு திணறல் இருந்தது. மருத்துவமனைக்கு கொண்டு வந்த 10 நிமிடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. உடற்கூறு ஆய்வில் குழந்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும். மருந்து ஏதாவது தவறு உள்ளதா அல்லது வேறு காரணமா என்பதும் தெரியவரும் என கூறியுள்ளார்.