இந்தியா ஆல் ஸ்டார்ஸ் மற்றும் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிகளிடையே நட்சத்திர கால்பந்து போட்டியானது சென்னை ஜவகர்லால் நேரு மைதானத்தில் மார்ச் 30 ஆம் தேதி நடைபெற்றது. இந்திய ஆல் ஸ்டார் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐஎம் விஜயன் டிசல்,  பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டனாக இருந்தார்கள். போட்டியின் முடிவில் பிரேசில் லெஜன்ட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியை பொதுமக்கள் உட்பட பிரபலங்கள் அனைவரும் வந்து கால்பந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி தங்களுடைய ஆதரவு வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் இந்திய ரசிகர்கள் குறித்து ரொனால்டினோ நெகிழ்ச்சி பதிவு போட்டுள்ளார். அதாவது, “எப்போதும் பாசத்துடன் அரவணைத்து வரவேற்கும் நாட்டிற்கு மீண்டும் சென்றது மிகவும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கால்பந்து போட்டிக்கு வந்து உற்சாகம் அளித்த அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.