
மலையாள சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் எம்.ஆர் ராஜா கிருஷ்ணன். இவர் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஆவார். இவர் மீது தற்போது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதாவது அவருடைய மனைவி தன்னை அந்தரங்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஏற்கனவே மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஒருவரின் மனைவியே அவர் மீது புகார் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.