தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக அரசுகள் பஞ்சுமிட்டாய் தடை விதித்தது. பஞ்சுமிட்டாயில் நச்சுத்தன்மை கொண்ட ரோடமின் பி என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுவது தான் அதற்கு காரணம். அதே வேதிப்பொருள் அடர் நிறங்கள் கொண்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுவது தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே கடைகள் அல்லது ஹோட்டல்களில் அடர் நிறத்துடன் உணவுப் பொருள்கள் இருந்தால் அதனை தவிர்க்கும் படி தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.