நீலகிரியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “40க்கு 40 என்ற இலக்கை தமிழக மக்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்து இருக்கிறார்கள். இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு மாபெரும் வெற்றி. பிரதமர் மோடியால் இனி தமிழ்நாட்டு மக்களை ஒருபோதும் வஞ்சிக்க முடியாது.

சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி, தமிழுக்கு ரூ.3 கோடி என ஒதுக்கவே முடியாது. சீனாவையும், அமெரிக்காவையும் பார்த்து பிரதமர் பயப்படுகிறாரோ இல்லையோ, திமுக-வையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் பார்த்து பயப்படுகிறார் என்று விமர்சித்துள்ளார்.