
மகாராஷ்டிராவின் நாக்பூரில், வதோடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமஸ்ரீ பீர் பார் பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி நடந்த வித்தியாசமான திருட்டு சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த நாளின் நள்ளிரவில், பெயர் தெரியாத ஒரு இளைஞர் பீர் கடையின் கவுண்டர் ஜன்னல் வழியாக கடைக்குள் புகுந்து, கவுண்டருக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.25,000 பணத்தை திருடிச் சென்றார். இந்த திருட்டு செயல் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவாகியுள்ளது.
आदमी है या ऑक्टोपस ?
नागपुर का ये Video हैरान कर देने वाला है। एक चोर काउंटर की ग्रिल से बीयर शॉप में घुसा और 25 हजार रुपए चुराकर ले गया !! pic.twitter.com/usdqeCrS2N— Sachin Gupta (@SachinGuptaUP) June 17, 2025
வீடியோவில், குற்றவாளியான அந்த இளைஞர், பீர் பாட்டில்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இரும்பு வலை ஜன்னலின் வழியே எளிதாக நுழையும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.
போலீசார் சிசிடிவி ஆதாரத்தை வைத்து விசாரணை நடத்தியதில், திருடியவர் ஷேக் ராஜா என்ற ஷேக் பாபா (வயது 20) என்பதும், அவர் அமராவதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. விசாரணையில், அவர் இதற்கு முன்பு சில இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
வதோடா காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஷ் போரடே கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக ஷேக் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறுகிய இடங்களில் நுழைந்து திருடுவதில் இந்த நபர் வல்லவராக இருக்கிறார்” என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.