
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள Park Hyatt ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹோட்டலில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 தொடருக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி தங்கியிருந்தது.
ஹோட்டலின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தால் புகை சுற்றியுள்ள பகுதிக்கெல்லாம் பரவியது. தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புத் துறையின் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தின.
A fire broke out at the Park Hyatt hotel in Hyderabad’s Banjara Hills on Monday, April 14. The Sunrisers Hyderabad team is currently staying at the hotel.
The fire reportedly broke out on the first floor of the hotel, sending thick smoke billowing across the area. Following the… pic.twitter.com/dLertHJZir
— The Siasat Daily (@TheSiasatDaily) April 14, 2025
ஹைதராபாத் மாவட்ட தீயணைப்பு அதிகாரியின் தகவலின்படி, SRH அணி வீரர்கள் அவர்கள் திட்டமிட்டிருந்தபடி பாதுகாப்பாக ஹோட்டலில் இருந்து வெளியேறினர்.
இந்த தீவிபத்தில் வேறு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தீ விபத்தின் காரணம் இதுவரை தெரியவில்லை, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.