
கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையில் குடும்பத்துடன் கடலில் குளித்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரபாகர், எஸ்தர் தம்பதி கன்னியாகுமரிக்கு சுப நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றிருந்தனர். சுப நிகழ்ச்சி முடிந்து புத்தன் துறையில் கடலில் குளித்த போது அலையில் சிக்கிய 2 குழந்தைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலையில் சிக்கிய குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது பெண் குழந்தையும், 5 வயது ஆண் குழந்தையும் பலியான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.