
உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தார்த்நகர் மாவட்டத்திற்கு சென்ற அரசு பஸ்சில் 53 பேர் பயணித்த நிலையில், பஸ் சித்தார்த்நகரின் ஷர்கவா பகுதியில் சென்றபோது சாலையில் உள்ள சைக்கிளில் பயணிக்கும் ஒருவர் எதிரே வந்தார். அந்த நபர் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பஸ்சை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில், சைக்கிளில் இருந்த நபர் மற்றும் பஸ்சில் பயணித்த 2 பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்ததாக தெரியவந்துள்ளது. படுகாயம் அடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்ன்ஹா சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.