
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் படிக்கிறார். பள்ளி முடிந்த பிறகு மாலை நேரம் சிறுமி ஒரு தனியார் மையத்தில் கணினி வகுப்பில் படித்து வந்தார். கடந்த 15-ஆம் தேதி கணினி வகுப்பு முடிந்ததும் பள்ளி ஆசிரியர் ஒருவர் சிறுமியை வீட்டில் விடுவதாக கூறினார். அவரது பேச்சை நம்பி சிறுமி ஆசிரியருடன் சென்றார். ஆனால் அவர் வேறு ஒருவரது வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த வீட்டில் அந்த பள்ளியின் முதல்வர், பள்ளி ஆசிரியர் ஒருவர், வன பாதுகாவலர் ஆகிய மூன்று பேரும் இருந்ததை கண்டு சிறுமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நான்கு பேரும் இணைந்து சிறுமியை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து உள்ளனர். பின்னர் யாரிடமாவது இதை கூறினார் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவோம் என மிரட்டி உள்ளனர். இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். கடந்த 22-ஆம் தேதி சிறுமி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீண்டும் அவரை மிரட்டி அதே வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் இரண்டாவது முறையாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி முதல்வர் ரவேந்திரன் குஷ்வாகா, பள்ளி ஆசிரியர் சிங் அசோக் குஷ்வாகா, வன பாதுகாவலர் பன்னாரி சிங் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது