
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியில் திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்துகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரதிக்ஷா(9) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தீபாவளி அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது திருமலைசாமி கம்பால் தனது மனைவியை அளித்துள்ளார். இதனால் சசிகலா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், சசிகலா செயற்கை பல் கட்டி இருந்துள்ளார். திருமலைசாமி அடித்த அடியில் அந்த பல் செட் கழன்று தொண்டை வரை சென்றுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே லோ பிரஷர் இருந்ததால் சசிகலா இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.