ஈழத் தமிழ் ஊடக ஆளுமையான பிபிசி தமிழோசையின் மூத்த செய்தியாளர் ஆனந்தி அக்கா வயது மூப்பு மற்றும் உடல் குறைவு காரணமாக லண்டனில் உயிரிழந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை முதன் முதலாக நேர்காணல் செய்து ஒலிபரப்பியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனந்தி அக்கா. இவர் இலங்கை சாவகச்சேரியை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 1970-களில் இங்கிலாந்தில் குடி பெயர்ந்தார். தமிழ் ஈழம் சார்ந்த செய்திகளை 30 ஆண்டுகளாக வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.