திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (60). இவரது தங்கை வழி பேரனான நான்கு வயது சிறுவன், விளையாட்டுத்தனமாக நேற்று காரின் ஓட்டுநர் சீட்டில் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென காரில் கியர் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேகமாக சென்ற கார் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த முத்து மீது பயங்கரமாக மோதியது. இதனால் முத்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.