ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் மூன்று பயணிகள் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் பேருந்தில் ஏறி ஒருவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அந்த வாலிபர் தான் கொண்டு வந்த கயிற்றால் ஓடும் பேருந்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நடத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.